ஆசை ஆசையாக சவர்மா... குடும்பமே ஹாஸ்பிடலில்... ஆய்வில் அதிர்ந்த அதிகாரிகள்... வெளிவந்த ஷாக் உண்மை

x

புதுக்கோட்டை கீழ 4ம் வீதியில் உள்ள சவர்மா மற்றும் சிக்கன் ரோல் கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் 5 பேருக்கும் இன்று அதிகாலை வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கெட்டுப்போன இறைச்சிகளை அவர்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவற்றை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

தொடர்ந்து கடை உரிமையாளரை நாம் விசாரணை செய்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்