மூதாட்டியுடன் நகைச்சுவையாக உரையாடிய அமைச்சர் - நேரடி விசிட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், கட்டிடங்களின் நிலை, கழிப்பறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மூதாட்டியிடம் அமைச்சர் உரையாடினார். மூதாட்டியின் உணவு குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவமனையின் ரசம் சாதம் நன்றாக இல்லையா என்று நகைச்சுவையுடன் உரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்