காதலன் முன்னே காதலியின் ஷாலை பிடித்து இழுத்து அத்துமீறிய காவலர் - அதிர்ச்சி வீடியோ

x

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரையில், இளம்ஜோடியை மிரட்டி காவலர் ஒருவர், 3 ஆயிரம் ரூபாயை ஜி-பே மூலம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. புறநகர் காவல் நிலையத்திற்கு காவலர் ராஜ்குமார் அழைத்துச் சென்று மிரட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணிடம் அத்துமீறிலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலரிடம் பெண்ணின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவலர் ராஜ்குமார் மீது ஏற்கனவே செயின் அபகரிப்பு, இளம்பெண்ணுக்கு சித்ரவதை கொடுத்தது ஆகிய 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், காதல் ஜோடியிடம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்