ஒரேநாளில் அதிர்ச்சி அடுத்தடுத்து சம்பவம்... சிக்கிய சிறார்கள்... பகீர் பின்னணி

x

கடந்த 14ம் தேதி மும்பையைச் சேர்ந்த நிராலிஷாவிடம் பைக்கில் சென்ற கும்பல் செல்போனை பறித்து சென்றது. அன்றைய தினம், மற்றொரு பெண்ணிடமும் இதேபோல ஒரு கும்பல் செல்போனை பறித்து சென்றது. இதுகுறித்து 2 பேர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் இரண்டு சம்பவத்திற்கும் தொடர்புடைய கும்பல் செல்போனை பறித்துவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும், அந்த கும்பல் காவல் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் ஜி பே மூலம் பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து ஜி பே எண் மூலம் அந்த கும்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், கல்லூரி மாணவர் கோகுலகிருஷ்ணராஜ் மற்றும் 3 சிறுவர்களை மடக்கி கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்