20 மாதங்களாக வழங்கப்படாத ஊதியம்...கையில் எடுக்கப்பட்ட ஆயுதம் பதற்றம்... பரபரப்பு

x

20 மாதங்களாக வழங்கப்படாத ஊதியம்...கையில் எடுக்கப்பட்ட ஆயுதம் பதற்றம்... பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் ஒன்றியத்தில் பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துவரலங்கண்மாய் கிராமத்தில் உள்ள ஆர்.சி. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும், தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கும் 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பகையஞ்சான் கிராமத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியருக்கும் 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்