ரயிலில் இருந்து தவறி விழுந்த நொடி.. அநியாயமாய் பறிபோன கர்ப்பிணி உயிர் - டிஎஸ்பி கொடுத்த விளக்கம்

x

விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கினார். விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமது, இறந்த கர்ப்பிணியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிய இருப்பதால், ரயில்வே போலீசாரின் கோரிக்கையை ஏற்று கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார். தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்