திடீர் மின்வெட்டு.. அதிகாரிகள் அலட்சிய பதில் - கொந்தளித்த மக்கள் செய்த செயல்...

x

அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நிலவும் மின்வெட்டால் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர்கள், மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அதிகாரிகள் மிகவும் அலட்சியத்துடனும் மெத்தன போக்குடனும் பதிலளிப்பதாக குற்றம்சாட்டினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்