போரூர் ஏரியில் மகனை தூக்கி வீசி தகப்பன் செய்த கொடூர செயல்.. தாம்பரம் பைபாஸில் பயங்கரம்..

x

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்

தனது 3 வயது மகனை போரூர் ஏரியில்

வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதை கண்டு ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக நீந்தி சென்று தண்ணீரில் சிக்கி தவித்த சிறுவனை உயிருடன் மீட்டு

போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஏரியில் மகனை வீசி விட்டு சென்றது தலைமை செயலக காலனியை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரிய வந்தது. அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன் தர்சனை ஏரியில் வீசிவிட்டு சென்றது அம்பலமானது. இதையடுத்து சிறுவனை தாயிடம் ஒப்படைத்த போலீசார் தலைமறைவான தந்தையை தேடி வருகின்றனர். ஏரியில் தந்தை மகனை வீசிவிட்டு சென்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்