பயிற்சியின் போதே தலைகால் புரியாமல் ஆடிய IAS அதிகாரி பூஜா - மகா. அரசு கொடுத்த தண்டனை

x

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மகாராஷ்டிராவின் புனேவில் உதவி ஆட்சியராக பணியாற்றிய பூஜா கேத்கர் புனே ஆட்சியர் சுஹாஸ் திவாஸ் தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்கி பணியில் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பூஜா கேத்கர், தனியறை, உதவியாளர், சொந்த சொகுசு காரில் சைரன், வி.ஐ.பி. நம்பர் பிளேட் ஆகியவை கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரின் பேரில் பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்துள்ள மகாராஷ்டிர அரசு, மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து அவரை விடுவித்துள்ளது... விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் பூஜா... இந்நிலையில், அவர் புனே ஆட்சியர் சுஹாஸ் திவாஸ் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்