அம்பேத்கர் சிலை அகற்றம்... பொன்னேரி அருகே பரபரப்பு | Ponneri

x

அம்பேத்கர் சிலை அகற்றம்... பொன்னேரி அருகே பரபரப்பு | Ponneri

#Ponneri #ThanthiTv

பொன்னேரி அடுத்த சிறுவாபுரி என்றழைக்கப்படும் சின்னம்பேடு கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்காக, பீடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, சுமார் 4 அடி உயரத்தில் சிமெண்டால் ஆன மார்பளவு, அம்பேத்கர் சிலை செய்யப்பட்டு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிலை நிறுவப்படாமல் அங்குள்ள அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நள்ளிரவில், ஊருக்குள் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் மார்பளவு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதுதொடர்பான தகவலின் பேரில் வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொது இடங்களில் சிலைகளை நிறுவுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள சூழலில், உரிய அனுமதியின்றி சிலையை நிறுவியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். உரிய அனுமதி பெற்று சிலையை வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய போலீசார், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலையை அங்கிருந்து அகற்றி, மீண்டும் அங்கன்வாடி மையத்திலேயே பாதுகாப்பாக வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்