பொன்னேரியை அதிர வைத்த கொலை - சமாதியில் இருந்த தலை..மர்மநபர்கள் வெறிச்செயல்

x

பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பஜார் பகுதியில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 கைகள் துண்டிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டு பாதியாக கிடந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சோழவரம் அடுத்த பெருங்காவூர் கிராமத்தில் உள்ள மயானத்தில், அஜித்குமார் என்பவரது சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின்குமார் என்பதும், இதன் மூலம் மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட உடல், அவருடையதுதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்தாண்டு செங்குன்றம் அருகே முன்விரோதம் காரணமாக 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான கருப்பு அஜீத் என்பவரது பிறந்தநாளின் போது, அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால், பழிதீர்க்கும் வகையில் இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்