கலர் மீன்கள் வளர்ப்பதாக கூறி வாடகை வீட்டில் செய்த காரியம்.. ரெய்டில் வெளிவந்த உண்மை | Ponneri

x

கலர் மீன்கள் வளர்ப்பதாக கூறி வாடகை வீட்டில் செய்த காரியம்.. ரெய்டில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்

சென்னை புழல் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லட்சுமிபுரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தெருவில், ரவிக்குமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம், கலர் மீன்களை வளர்ப்பதாக அவர் கூறி வந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ற அதிகாரிகள், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செயதனர். அப்போதுதான், அருகில் வசித்தவர்களுக்கு தடை செய்யப்பட்ட உயிரினங்களை வளர்த்து வந்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்