நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி கொடூர மரணம் - பொள்ளாச்சியில் காரில் இருந்து இறங்கியதும் பயங்கரம்

x

நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி கொடூர மரணம் - பொள்ளாச்சியில் காரில் இருந்து இறங்கியதும் பயங்கரம்

பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி நீதிபதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கருணாநிதி. இவர்

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது, எதிரே இருந்த மளிகை கடைக்கு செல்ல காரில் இருந்து இறங்கினார். அவர் அந்த கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, அவரது உடலுக்கு கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மிகவும் நேர்மையானவர் கருணாநிதி என்று அவர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்