மருத்துவமனை சமையலறையில் உணவுகளை ருசி பார்த்த ஆட்சியர்

x

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" நிகழ்ச்சி மூலம் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று 9 சென்டிமீட்டர் மழை பெய்த போதும் எந்த சுரங்கப்பாதையும் அடைக்கப்படவில்லை என்றும், மழைநீர் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு நவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீரை மாற்றி விட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மீண்டும் அதிக அளவில் மழை பெய்தாலும் எதிர்கொள்ளும் அளவிற்கு எல்லாம் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்... முன்னதாக மருத்துவமனை ஆய்வின் போது ஆட்சியர் கிராந்தி குமார், மிகவும் எளிமையாக அங்கு சமையலறையில் உணவுகளை ருசிபார்த்தார்...


Next Story

மேலும் செய்திகள்