சிக்கிய ரூ.2.73 கோடி - தட்டி தூக்கிய போலீஸ்

x

பெலகாவி நகரில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையில் சென்ற வாகனத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்த பணம் சிக்கியுள்ளது... மகாராஷ்டிர மாநிலம் சங்கலியில் இருந்து அந்த வாகனம் ஹூப்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பணத்தை எடுத்து வந்த சச்சினா மெனகுடுலே மற்றும் மாருதி மரகுடே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வருமானவரி துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மகாராஷ்டிராவிற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லையோர மாவட்டங்களில் இருந்து விநியோகம் செய்வதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்