"வாழ்வதா? சாவதா?" - பெண் போலீஸ் வெளியிட்ட வீடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதால், மன உளைச்சலில் வாழ்வதா? சாவதா? என தெரியவில்லை என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசார் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் கச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும், அவருடைய தம்பிக்கும் இடையே ஏற்பட்ட நில பிரச்சினையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் வெங்கடேசனை கந்திலி போலீசார் கைது செய்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் பணிபுரியும் அவருடைய மகள் பூங்கொடி போலீஸ் சீருடையுடன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்