காதல் மனைவி செய்த பெரும் துரோகம்... கணவன் உருவில் உயிரை குடித்த கர்மா
ஈரோட்டில் முதல் திருமணத்தை மறைத்த மனைவியை, கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பெருந்துறை அருகே எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த காதல் தம்பதி கோட்டைராஜா-மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 7 வயதில் மகன் உள்ளார். இதனை மறைத்து கோட்டை ராஜாவை, மகாலட்சுமி காதல் திருமணம் செய்தார். திருமணமான 2 வருடத்திற்கு பிறகு இந்த உண்மை வெளிவந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் மகாலட்சுமியை கோட்டை ராஜா கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமும் ஆடினார். பிரேத பரிசோதனையில் உண்மை வெளிவரவே, கோட்டை ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story