“நன்றி".. மோடி ட்வீட்.. | PM Modi | Tweet

x

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணி வாக்காளர்களை ஒருங்கிணைக்கத் தவறிவிட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, சாதிவெறி, வகுப்புவாத மற்றும் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டினார். ஒரு சில குறிப்பிட்ட குடும்ப அரசியல் கட்சிகளை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டது இந்தியா கூட்டணி என்றும், தேசத்திற்கான எதிர்கால பார்வையை முன்வைக்கத் தவறிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். பிரச்சாரத்தின் மூலம், மோடியை அவதூறு செய்ய மட்டுமே இந்தியா கூட்டணி நிபுணத்துவத்தை மேம்படுத்தியதாகவும், இத்தகைய பிற்போக்கு அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் ஒவ்வொரு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஒவ்வொரு நிர்வாகியையும் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்