வளர்ப்பு நாயைக் கடித்துக் கவ்விச் சென்ற சிறுத்தை

x

கோவையில் சிறுத்தை வளர்ப்பு நாயை கடித்து கவ்விக் கொண்டு செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவர் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை அங்கு வளர்க்கப்பட்ட வந்த நாயைக் கடித்து கவ்விச் சென்றுள்ளது... இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, சிறுத்தையைப் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்