பெருங்குடி - வேளச்சேரி சாலையில் திடீர் மாற்றம்.. மாநகராட்சி அதிரடி முடிவு

x

பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி பறக்கும் ரயில்நிலையத்தை இணைக்கும் வகையில், ரயில்வேக்கு சொந்தமான மூன்று புள்ளி 5 கிலோ மீட்டர் சாலை உள்ளது. சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று, இந்த சாலைக்கான பராமரிப்பு பணியை சென்னை மாநகராட்சியிடம், தென்னக ரயில்வே ஒப்படைத்தது. இந்த சாலைகளில் புதிதாக நீர்த்தேக்க குளங்களை அமைத்து, அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை திருப்பிவிட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்