பாடம் எடுக்கும் போது நின்று போன ஆசிரியரின் மூச்சு - அதிர்ச்சியில் மாணவர்கள்

x

பட்டுக்கோட்டையில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,நெல்லை மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வகுப்பில்

சமூக அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிந்த போது,

திடீரென மயங்கி விழுந்துள்ளார். மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மணைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஆசிரியர் செல்லத்துரை உடலுக்கு, பயின்ற மாணவிகள், உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்