லூப் சாலையில் சாலையோர மீன் வியாபாரிகளுக்கு தடை.. அதிருப்தியில் மீன் வியாபாரிகள்

x

பட்டினப்பாக்கம் லூப் சாலையில், இன்று முதல் சாலையோரத்தில் மீன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலையோர மீன் வியாபாரிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய மீன் அங்காடி திறக்கப்பட்டது. வியாபாரிகள் சில பேருக்கு கடை ஒதுக்கப்படாததால், அவர்கள் மீண்டும்சாலை ஓரத்திலேயே கடை வைத்தனர். இந்நிலையில், புதிய மீன் அங்காடி இன்று முதல் முழு செயல்பாட்டுக்கு வருகிறது என்றும் சாலை ஓரத்தில் இனிமேல் யாரும் கடை வைக்கக்கூடாது என்றும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடை ஒதுக்கப்படாத மீன் வியாபாரிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். மீன் வாங்க வந்த நுகர்வோர் சிலர், மீன் வாங்குவது முன்பைவிட வசதியாக உள்ளது என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்