பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு செல்லும் தமிழக வீரர்

x

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். அடுத்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் ஆடவர் டிராப் (trap) பிரிவு ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் அவர் திறம்பட செயல்பட்டதாக தேசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்