"CM செல்லுக்கு கால் பண்ணவா?" - "நீ எங்க வேணும்னாலும் பேசு " - GH-ல் எகிறிய தூய்மைப் பணியாளர்

x

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டு வழங்கும் பணியாளர் இல்லாததால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்த நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதால் அவர்களுடன் மருத்துவமனை தூய்மைப் பணியாளர் வாக்குவாதம் செய்யும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. தூய்மைப் பணியாளராக இருந்து வரும் பழனிசெல்வி என்பவர் ஓபி சீட்டு வழங்கும் அறைக்கு வந்த நிலையில் அவரிடம் அங்கு காத்திருந்த பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்... அப்போது பழனிசெல்வி ஆவேசமாக ஒருமையில் பேசி கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்