சென்னையில் பேமஸான பல்லாவரம் சந்தையில் இப்படி தான் நடக்குதா? - மக்களே உஷார்

x

சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில் கலப்பட மற்றும் போலியான உணவு பொருட்களை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து பல்லாவரம் வாரச்சந்தையில் போலீஸ் பாதுகாப்புடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கலப்பட நெய், கலப்பட தேன், கலர் பொடி கலந்த அப்பளம், காலாவதியான உணவு பொருட்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்