பாஜக நிர்வாகியை... சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்... நடுங்கிய பல்லடம்

x

பல்லடத்தில் பாஜக நிர்வாகி வெட்டப்பட்ட வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பனப்பாளையம் பாஜக கிளை தலைவர் தமிழ்ச்செல்வன், தனது நண்பர் டைமண்ட் என்பவருடன் நேற்று மாலை BDO காலனி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் மற்றும் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ், புருசோத்தமன் உள்ளிட்ட 6 பேருக்கும் இடையே வழிவிடுவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அங்கு வந்த 8 பேர் சேந்து தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகியோரை பட்டாகத்தியால் வெட்டியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஐந்து சிறார்கள் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்