மருமகன் கதையை முடிக்க தென்னை மர மாத்திரை கொடுத்த மாமியார் - காதலனுடன் சேர்ந்து கோடூர சம்பவம்

x

மருமகன் கதையை முடிக்க தென்னை

மர மாத்திரை கொடுத்த மாமியார்

காதலனுடன் சேர்ந்து துடிதுடிக்க கோடூர சம்பவம்

விதவையாக ஆசைப்பட்ட மனைவி

8 மாதமாக கிணற்றில் ஊறிய கணவன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, 8 மாதங்களுக்கு முன் மாயமான இளைஞர் கிணற்றுக்குள் சடலமாக மீட்கப்பட்டிருப்பதும், இதன் பின்னணியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக...

8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை, கிணற்றுக்குள் சடலமாக கண்டு ஊரே மிரண்டு போயிருக்கிறது....

கணவரை காணவில்லை எனக்கூறி இளைஞரின் மனைவி போலீசில் கண்ணீர் மல்க புகாரளித்திருந்த நிலையில், அவர் உட்பட அவரின் குடும்பத்தாரையே கொலையாளிகளாக போலீசார் கைது செய்திருப்பது திருப்பூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தை அதிரச் செய்திருக்கிறது...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த தம்பதி வடிவேல் - திவ்யா...

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு திடீரென கணவரை காணவில்லை என திவ்யா போலீசில் புகாரளித்திருந்தார்.

விசாரணையில் எந்தவொரு தகவலும் கிடைக்காததால் விரக்தியடைந்த வடிவேலுவின் உறவினர்கள், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்த நிலையில், வடிவேலுவின் மனைவி மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...

திவ்யாவின் தாயும், வடிவேலுவின் மாமியாருமான மரியாளுக்கு மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவருடன் தகாத உறவு இருந்து வந்தது தெரியவந்தது....

இருவரும் 20 வருடங்களாக தகாத உறவில் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மருமகனுக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்று சுமார் 7 லட்ச ரூபாய் பணத்தை மரியாள் மோசடி செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் காதலன் பாலாஜியுடன் சேர்ந்தே இந்த மோசடியை மரியாள் நிகழ்த்திய நிலையில், விரக்தியில் இருந்த வடிவேல் பணத்தை திருப்பி தருமாறு கூறி தகராறு செய்து வந்திருக்கிறார்...

இதனால், ஆத்திரத்தில் இருந்த மரியாள், மருமகனை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்... இதில் வடிவேலுவின் மனைவியும் கூட்டு சேர்ந்தது தான் கொடூரத்தின் உச்சம்.. காரணம், வடிவேல் அடிக்கடி மதுபோதையில் வந்து தன்னை சித்ரவதை செய்திருந்ததால் கணவரை தீர்த்து கட்டும் முடிவிற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்....

இதையடுத்து, தனது தகாத உறவு காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் மூலம் மருமகனுக்கு தென்ன மர மாத்திரையை கொடுத்து அவரை நிலை குலைய செய்த மரியாள், பின்னர் மருமகனை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், உடலை தார்ப்பாயில் கட்டி, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கிணற்றுக்குள் வீசி விட்டு, ஒன்றுமறியாதது போல் வடிவேலுவின் மனைவியை கொண்டே போலீசில் புகாரளித்து நாடகமாடியதும் தெரியவந்தது...

உண்மையறிந்து வடிவேலுவின் சகோதரி மற்றும் அவரது தாயாரும் வடிவேலுவின் சடலத்தின் முன் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், வடிவேலின் மனைவி, மாமியார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்