பழனி மலை அடிவாரத்தில் சிறுவர்கள் செய்த பகீர் காரியம்...இன்ஸ்டாவில் பரவிய அதிர்ச்சி வீடியோ

x

பழனி அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், கஞ்சா புகைத்து, போதையில் விழுந்து கிடப்பது போன்று இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா வியாபாரியை போலீசார் தேடி வந்தனர். பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவை கைப்பற்றப்பட்டன. 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ தொடர்பாக, பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன், மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர் மீது வழக்கு தொடர்​​ந்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்