புதைக்கப்பட்ட சிறுமி உடல்...தோண்டிய போலீசுக்கு ட்விஸ்ட் - பழனியில் பாபநாச சம்பவம்

x

பழனி அருகே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்டநிலையில், அங்கே தோண்டி பார்த்தபோது நாயின் உடல் இருந்தது தெரிய வந்தது. மேல்கரைப்பட்டி கிராமத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இறந்த மனித உடல் புதைக்கப்பட்டதற்கான தடயம் இருந்துள்ளது. அதன் அருகே சிறுமியின் துணிகள் கிடந்ததை பார்த்த ஆடு மேய்க்க வந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த பழனி டி.எஸ்.பி. மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, அங்கே இறந்த நாயின் உடல் இருந்தது தெரியவந்தது. பாபநாசம் படம் போல மனித உடல் இருக்கும் என நினைத்து போலீசார் தோண்டியபோது நாயின் உடல் கிடைத்தது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்