ஊட்டி போனால் இனி இங்கயும் போணும்.. புதிய பூங்கா..

x

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ரேஸ்கோர்ஸ் குதிரைப்பந்தய மைதானத்தை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு சமீபத்தில் கையகப்படுத்தியது. தொடர்ந்து அந்த இடம் தமிழக தோட்டக்கலைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கா.ராமச்சந்திரன் ஆகியோர் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விரைவில் இங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு அடுத்தாண்டு முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்