NLC விவகாரம்.. மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

x

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண, உயர் மட்ட குழுவை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்க கோரி என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆறு மாதங்களில் உயர் மட்டக்குழு ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த

குழுவில், மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் நிலக்கரி அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள், கடலூர் ஆட்சியர், தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என குறிப்பிட்டார். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண உத்தரவிட்டு, என்.எல்.சி. நிர்வாகம் தாக்கல் செய்திருந்த வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்