யானை முகனை மணி அடித்து வழிபட்ட யானை... பார்த்து வியந்த சுற்றுலா பயணிகள்! | Nilgiris

x

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி யானைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. யானைகளை குளிப்பாட்டிய பாகன்கள் அதற்கு மாலை உள்ளிட்டவற்றை அணிவித்து அழகுபடுத்தினர். தொடர்ந்து, கிருஷ்ணன் என்ற வளர்ப்பு யானை இருகால்களையும், துதிக்கையையும் உயர்த்தி கோவிலை சுற்றி வந்து விநாயகரை வழிபட்டது. கோவில் முன்பு அணிவகுத்து நின்ற யானைகள் பிளிறியபடி விநாயகரை வழிபட்ட காட்சிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். தொடர்ந்து, தெப்பகாடு யானைகள் முகாமிற்கு வருகை புரிந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்