ஒருபுறம் சீறி வரும் வெள்ளம்.. மறுபுறம் காடு.. நடுவே சிக்கிய பஸ்... நீலகிரியில் பதறிய பயணிகள்

x

நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா பகுதியில் அடர்ந்த வனத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் மாணவர்கள், பொதுமக்கள் பரிதவித்தனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய மாயாற்றின் கரையில் கல்லாம்பாளையம் அருகே அரசு பேருந்து பழுதாகி நின்றது. ஒரு சில பயணிகள் அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்திற்கு ஏறிச் சென்றனர். விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள தங்களது கிராமத்திற்கு தரமான பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்