பெல்ட் கம்பியில் சிக்கிய டி-சர்ட் - நொடியில் பலியான தொழிலாளி - நீலகிரியில் சோகம்..

x

தனியார் தேயிலை தொழிற்சாலையின் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம்கோத்தகிரி அரவேனு பகுதியில், பிரபல தனியார் தேயிலை தொழிற்சாலையில் திருச்சியை சேர்ந்த சிவகுமார் வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல், சிவகுமார் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது டி-சர்ட், இயந்திரத்தின் பெல்ட் கம்பியில் சிக்கி, கழுத்து பகுதியுடன் இறுகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில்,

எஸ்டேட் நிர்வாகம் சார்பில் சிவக்குமாரின் குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்