குடியிருப்பு பகுதியில் மீண்டும் நுழைந்த புல்லட் யானை

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர்

பகுதியில் புல்லட் என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று, குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்ததை அடுத்து, கடந்த மாதம், வனத் துறையினரால் வனத்திற்குள்

விரட்டியடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்த யானை சேரங்கோடு பகுதியில் இன்று நுழைந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த யானை

குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்க, வனக்

களப்பணியாளர்கள் அதை கண்காணிக்கும் பணியில்

ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்