நீலகிரியை மிரட்டிய காட்டு யானைகள்... களத்தில் இறங்கிய கும்கிகள் - வனத்துறையினர் எச்சரிக்கை

x

நீலகிரி மாவட்டம், கூடலூரில், கிராமத்தை சுற்றி வளைத்த 12 காட்டு யானைகளை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். 12 காட்டு யானைகளையும் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் கட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன. அதே நேரத்தில், அந்த யானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் வரக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்திள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்