உறுதியான நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு.. ருத்துவ ஆய்வு நடைபெறாததால் மக்கள் அதிருப்தி

x

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் மருத்துவ ஆய்வு நடைபெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினரின் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நாடுகாணி சோதனைச் சாவடியில் நகராட்சி துறை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி மருத்துவ குழுவினரின் ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்