தீயாய் பரவும் செல்போனில் எடுத்த வீடியோ.. கரித்து கொட்டும் உள்ளூர் மக்கள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில்

தொடர் மழை காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டு, தெப்பக்காடு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதில்

வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ஜீப் ஓட்டுநர் ஒருவர், பயணிகளை ஏற்றிக்கொண்டு அத்துமீறி ஆற்றைக் கடந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளூர் வாகன ஓட்டுனருக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்களை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்