பூமியில் விரிசல்.. மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதையும் கிணறு.. பீதியில் நீலகிரி.. வைரல் வீடியோ

x

தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிக்கு சொந்தமான விடுதியின் கிணறு ஒன்று மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் சூழ்நிலையில் விடுதியின் அருகில் உள்ள கிணற்றை சுற்றி பூமியில் லேசான விரிசல் ஏற்பட்டது. பின் மெல்ல மெல்ல அந்த கிணறு புதைந்து வருகிறது. கிணறு மண்ணுக்குள் புதைவது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்