வெளியேறிய NH3 கேஸ் - மூச்சு விடமுடியாமல் தவித்த 20 உயிர்கள் | NH3 Gas Leak

x

தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறி விபத்து ஏற்பட்டது. இரவு சுமார் 11 மணியளவில் அம்மோனியா கேஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் நிலையில், ஆலை முழுவதும் அம்மோனியா வாயு பரவியது. இதில் 20க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்