மொத்த தமிழகத்தையும் அதிரவிட்ட IT ஊழியரின் குடும்ப கொலைகள்.. இவர்தான் அந்த பிரிந்துசென்ற மனைவி..

x

காராமணிக்குப்பம் பகுதியில், தாய், மகன், பேரன் ஆகிய மூன்று பேர் பூட்டிய வீட்டுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 7 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தாயார் அஞ்சும் சுல்தானா, பெங்களூருவில் இருந்து கடலூர் வந்தார். அவரிடம், காலை முதல் மதியம் வரை நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, உயிரிழந்த தனது 10 வயது மகனின் உடலை பார்க்க, அஞ்சும் சுல்தானா அனுமதிக்கப்பட்டார். பிறகு, மீண்டும் இரவு வரை அஞ்சும் சுல்தானாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்