நெல்லையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.. 9 மணி நேரமாக திணறும் தீயணைப்பு வீரர்கள்

x

நெல்லை பேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மைதீன் பிச்சை என்பவருக்கு சொந்தமான மரக்கடையில் கட்டுமானப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்​றிரவு கடையை பூட்டிய பின்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 மணி நேரத்தைக் கடந்தும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்