அலுவலக படிகள் To இருக்கை வரை... தொட்டு வணங்கிய நெல்லை மாநகர் ஆணையர்... வைரலாகும் பதவியேற்பு வீடியோ

x

நெல்லை மாநகராட்சியின் 31வது ஆணையராக சுகபுத்ரா ஐ.ஏ.எஸ். பதவியேற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா, நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி, பதவியேற்புகாக மாநகராட்சி அலுவலகம் வந்த சுகபுத்ரா, அலுவலக படிக்கட்டுகளை தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து, ஆணையர் அறைக்கு சென்ற அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை தொட்டு பிரார்த்தனை செய்து, பின் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்