திணறவிடும் ஜெயக்குமார் மரணம். தினம் தினம் ட்விஸ்ட் கொடுக்கும் மர்மம் கிடைத்த தடயம். கிடைக்குமா விடை?

x

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 2ம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து 8க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட குழிக்குள் இருந்து டார்ச் லைட் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஜெயக்குமார் உயிரிழப்பதற்கு முன், அவர் பிளாஸ்டிக் கடை ஒன்றில் பொருள் வாங்கிய சிசிடிவி வெளியாகியிருந்த நிலையில், கைப்பற்றப்பட்ட டார்ச் லைட் அந்த கடையில் வாங்கியது தான் எனக் கூறப்படுகிறது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட்டை மீட்டிருக்கும் போலீசார், அதன் பேட்டரிகளை தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட பிளாஸ்டிக் கடை உரிமையாளரான நிர்மல், போலீஸ் விசாரணையில், தன் கடையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் தான் இது என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்