நீட் வினாத்தாள் கசிவு.. 4 பேர் அதிரடி கைது - வெளிவந்த ஷாக் தகவல்

x

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் தொடர்பாக, ஆறு வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களான சந்தன் சிங், ராகுல் ஆனந்த், குமார் ஷானு, கரண் ஜெயின் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருந்த விடுதி அறைக்கு சீல் வைத்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். நீட் வினாத்தாள்களை திருடிய குற்றச் சாட்டில் கைதான பங்கஜ் குமார், தற்போது கைதாகி உள்ள பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் உதவியுடன் விடைகளை கண்டுபிடித்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்