நீட் மையத்தில் மாணவர்கள் சித்திரவதை! அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல் | Neet Exam Coaching

x

திருநெல்வேலியில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை கடுமையாக தாக்குவதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. அந்த பயிற்சி மையத்தில் ஏற்கெனவே பணியாற்றியவர் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில், பயிற்சி மையத்தை நடத்தி வந்த ஜலாலுதீன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் தாக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்த மாநில மனித உறுப்பினர் கண்ணதாசன், பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்திச் சென்றார். இந்நிலையில், அந்த பயிற்சி மையத்தின் மாணவியர் விடுதியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தன்ஷிகா பேகம் தலைமையிலான அலுவலர்கள், நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விடுதிக்கு, சமூக நலத்துறையிடம் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனுமதி பெறாததற்கு காரணம் கேட்டு சமூக நலத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்