2.87 ஏக்கர்.. ரூ.23 கோடி.. அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கிய தாசில்தார் | Nandambakkam | Thanthitv

x

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.87 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அதில் தண்ணீர் கம்பெனி, கட்டுமான பொருட்கள் விற்பது, கல் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து குன்றத்தூர் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். தற்போது மீட்கப்பட்ட 2.87 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.23 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்