தமிழகத்தை அதிரவிட்ட கொடூர `பல்வால்' கேங் - நாடு முழுவதும் பறந்த பேக்ஸ்

x

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையரின் புகைப்படங்களை இந்தியா முழுவதும் அனுப்பி அவர்கள் மீதான வழக்கு விவரங்களை சேகரிக்க முடிவு செய்து இருப்பதாக மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 27ம் தேதி ஏடிஎம் எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து விட்டு வந்த ஹரியாணா மாநில கொள்ளையர்களை, வெப்படை அருகே தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள், தென்மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏடிஎம் எந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர்களின் புகைப்படங்களை நாடு முழுவதும் அனுப்பி, வழக்கு விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்