அடம்பிடித்து கொலுசை வாங்கி வடக்கு நபர்கள் செய்த சம்பவம்..திடீரென காலில் தெரிந்த மாற்றம்

x
  • நாமக்கல்லில் கொலுசுக்கு பாலிஷ் போட்டு ஏமாற்றிய வடமாநில இளைஞர்கள் இருவரை பிடித்து பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
  • பரமத்தி வேலூர் அடுத்த கல்லாங்காடு பகுதியை சேர்ந்த தாரணியிடம், வட மாநில இளைஞர்கள் இருவர் வெள்ளிப் பொருட்களை பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர்.
  • தாரணி வேண்டாம் என சொல்லியும், அடம்பிடித்து அவரது காலில் இருந்த கொலுசுகளை வாங்கி இளைஞர்கள் பாலிஷ் போட்டுள்ளார்கள்.
  • பின்னர் கொலுசு எடை குறைய தாரணி இளைஞர்களை தேடியுள்ளார். தன்னுடைய உறவினரிடமும் தாரணி சொல்லியிருக்கிறார்.
  • அப்போது இருவரும் தங்கம் பாலிஷ் போட்டு கொடுத்து ஏமாற்றியவர்கள் என உறவினர் சொல்லவும் ஊர்மக்கள் இருவரையும் தேடினர்.
  • பாண்டமங்கலம் தண்ணீர் தொட்டி அருகே சென்று கொண்டிருந்த இரு இளைஞர்களையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • விசாரணையில் இளைஞர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார், தருண்குமார் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது

Next Story

மேலும் செய்திகள்