நாமக்கல் ஏடிஎம் கொள்ளை - விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

x

கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து தமிழகம் வந்த கும்பலை, நாமக்கல் மாவட்ட போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும், டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கான வெகுமதியை வழங்கி பாராட்டினார். மேலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 23 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்ட சம்பவம், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்